தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரம் – தமிழரசுக் கட்சியின் ஐந்து தரப்பினருக்கு எதிராக வழக்கு

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கட்சியின் விதிமுறைகளை மீறி தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்து, குறித்த நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய ஐந்து தரப்பினருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு திகதியிடப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment